தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் டிஜிபி என அமைச்சர் சேகர்பாபு பாராட்டு.
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்திய துணைக் கண்டத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாராட்டு தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தீவிரவாத மதவாதத்திற்கு இடம் தராமல் செயலாற்றக்கூடிய காவல்துறை தலைவரை முதல்வர் தமிழகத்திற்கு அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்காக உலக அளவில் பாராட்டு பெற்றது தமிழக காவல்துறை என தெரிவித்தார். இதனிடையே, மனசாட்சி இல்லாதவர்கள் கூட அண்ணாமலை போல காவல்துறையை பற்றி பேச மாட்டார்கள் என தமிழக காவல்துறை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…