வடசென்னைக்கு ரூ.4,181 கோடி பட்ஜெட்.! 219 திட்டங்கள்.! சேகர்பாபு கொடுத்த அப்டேட்.!

Published by
மணிகண்டன்

சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .

வடசென்னை பகுதி மேம்பாட்டு நிதியாக மட்டும் சுமார் 4,181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்றும், இதனை கொண்டு வடசென்னை பகுதியில் மட்டும் சுமார் 219 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு அவற்றை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளையும் ஒன்றிணைத்து அத்தனையும் 2025க்குள் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

வீடில்லாமல் குடிசையில் வாழும் மக்களுக்காக, மாற்று நிரந்தர குடியிருப்புகள் அமைக்க தற்போது அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களை பார்வையிட்டு வருகிறோம் என்றும், வடசென்னை பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றும், அதனால் இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மேல்நிலை பள்ளியை மேம்படுத்த உள்ளோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு கொடுத்த பழைய குடியிருப்புகள் எங்கெல்லம் இடிந்து உள்ளதோ,  அதனை சீர் செய்தோ அல்லது புதிய இடத்தில் குடியிருப்புகள் கட்டித்தரவோ நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றும் இதற்காக அந்த துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

4 minutes ago

அதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

46 minutes ago

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

1 hour ago

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

2 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

9 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

11 hours ago