பட்டாசு ஆலை விதிமுறைகள் மீறி செயல்பட்டு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் மூர்த்தி உறுதி.
இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை எனும் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.
அமைச்சர் மூர்த்தி இந்த விபத்து குறித்து பேசுகையில், ‘ பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்னர் தான், பட்டாசு ஆலைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை, விதிமுறைகள் மீறி பட்ட்டாசு ஆலைசெயல்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி தெரிவித்து இருந்தார்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…