நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்.
விடியா திமுக அரசின் திறமையின்மையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றசாட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை கோடை மழையில் இருந்து பாதுகாக்க அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் தார்ப்பாய் வழங்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது குறிப்பிட்டவாறு, மழையால் நெல்மணிகள் வீணாவதை தடுக்கும் வகையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் இனி திறந்த வெளியில் எங்கும் சேமிக்கப்படாமல், நேரடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும். மேலும், கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய விதிகள் பின்பற்றப்படுகின்றன. புதிய நேரடி கொள்முதல் நிலையங்களை உருவாக்க பல்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…