இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை என்று என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அதிமுக சார்பாக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்..அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் கேசவநேரி பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் உட்பட சிலர், ரேஷன் கடை கேட்டு மனு அளிக்க சென்றனர். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு அளிக்க சென்றவர்களையும்,இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை . இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் பேசியதாக திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…