அமைச்சர் பொன்முடி மகன் கெளதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை.

அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கெளதம சிகாமணி சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.  சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.

2006-2011 காலகட்டத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது வானூர் அருகே பூத்துறையில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுபோன்று அமைச்சரின் மகன் கெளதம சிகாமணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் பொன்முடியிடம் கடந்த இரு தினங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்பின் சோதனை குறித்த தகவலை அமலாக்கத்துறை தனது ட்விட்டரில் வெளியிட்டது. அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

46 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

59 minutes ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

3 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

12 hours ago