[File Image]
மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் குறிப்பிட்டார்.
கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தை படுத்தும் விதமாக புதிய செயலியை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தக்காளி விற்பனை பற்றி கூறினார்
வெளிச்சந்தையில் தக்காளி விலையில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளியை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில் தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள் குறித்து பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பிற மாநிலங்களிலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கிறது. இருந்தும் அம்மாநில முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுகுறியது என பிற மாநிலத்தவர்கள் கூறுகிறார்கள் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
மேலும், தற்போது பட்டியலிடப்பட்டுள்ள கடைகளுக்கு மட்டுமே தக்காளி மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற மாவட்டங்களும் தக்காளி மலிவு விலையில் விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் குறிப்பிட்டார்.
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…