திமுகவை பார்த்த பாவமா இருக்கு-சீண்டும் அமைச்சர்

Default Image
  • திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை; பரிதாப உணர்வு தான் வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் இரு கட்டங்களாக நடக்க உள்ளது.இதற்கான வேட்பு மனுக்கள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற 3 ஆண்டுகள் கடந்து விட்டது.நீதிமன்றம் தேர்தல் ஆனையத்திடம் எப்பொழுது தான் தேர்தல் நடத்துவீர்கள் என்று கேட்காத குறையாக வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து ஒரு வழியாக தேர்தல் நடைபெற போகிறது என்று மக்கள் நினைத்து கொண்டிருந்த வேளையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மீண்டும் பழைய கிளவி கதவ திறடி கதையாக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா…?நடக்காது என்ற விவாதங்களை கிளப்பிய நிலையில் தற்போது டிச.,27 மற்றும் 30 தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும்,எதிர்கட்சிக்கும் அவ்வபோது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டியில் திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை, பரிதாப உணர்வு தான் வருகிறது என்று கூறியுள்ளார் மேலும் அவர் பேசுகையில் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அதிமுக வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்