PUBG செயலிக்கு  தடை விதிப்பது  குறித்து அமைச்சர் ஆர். பி. உதயகுமார் .!

Published by
Ragi

மத்திய அரசின் கவனத்திற்கு ஆன்லைன் கேம்மான PUBG செயலிக்கு தடை விதிப்பது குறித்து கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கமுடையவர்கள். அந்த வகையில் அனைவரையும் ஈர்த்துள்ள ஆன்லைன் கேம் PUBG. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் இந்த கேம்மில் அடிமை ஆகியுள்ளனர். தூக்கமில்லாமல் விளையாடும் இந்த கேம்மினால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சீன செயலிகளான டிக்டாக் உட்பட 59ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் கேம்மான PUBG-யை தடை செய்வது குறித்து அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள திரு. வி. க. நகரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதனுடன் மத்திய அரசின் கவனத்திற்கு ஆன்லைன் கேம்மான PUBG-யை தடை செய்வது குறித்து கொண்டு செல்லப்படும் என்று கூறிய அவர் இலவச இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடமாடும் காய்ச்சல் முகாம்களின் மூலம் தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

17 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

4 hours ago