மனைவியை இழந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன்.!தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த மு.க. ஸ்டாலின்.!

Published by
Ragi

அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. இதுகுறித்து அறிந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உடனடியாக மணியன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , மாண்புமிகு அமைச்சர் திரு. ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி திருமதி. கலைச்செல்வி அவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகு‌ந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அன்புக்குரிய தமது மனைவியை இழந்து வாடும் அமைச்சர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

17 minutes ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

59 minutes ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

59 minutes ago

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…

1 hour ago

பரபரக்கும் சட்டப்பேரவை., வெளியேறினார் அப்பாவு! ஆதரவளித்த செங்கோட்டையன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

“தொடை நடுங்கி திமுக.., உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…

2 hours ago