அமைச்சர் ஓ. எஸ். மணியனின் மனைவி மரணம்.! இரங்கலைத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

Default Image

அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் .

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யமிற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது ட்விட்டர்  பக்கத்தில் அமைச்சருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,நாகை மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு அமைச்சருமான ஓ.எஸ். மணியன் அவர்களின் மனைவி திருமதி. கலைச்செல்வி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

England Captain Jos Butler - Ravi shastri
TN CM MK Stalin - BJP State president Annamalai
ADMK Former minister Sengottaiyan - ADMK Chief secretary Edappadi palanisamy
India vs England 3rd ODI
Kingdom - Vijay Deverakonda
Sunita Williams