தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன.  7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்.

நாளை முதல் ரூ.6000 விநியோகம்..! யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும், அண்டை மாநில கொரோனா பாதிப்பு பற்றியும் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 3 வகையான கொரோனா தடுப்பூசிகள் 98 சதவீத் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

தற்போது வரும் கொரோனா என்பது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது, கொரோனா வைரஸானது, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ்,  ஓமிக்ரான், ஓமிக்ரானில் 20 – 30 வகை தொற்று என பல்வேறு வகைகளில் உருமாற்றம் ஆகிவருகிறது. சிங்கப்பூரில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தோம். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3,4 நாட்களில் தொற்று குணமாகி விடுகிறதாம்.  இந்த தொற்று காரணமாக சளி, இருமல் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

கேரளாவில் 280பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடமும் இது குறித்து பேசினோம்.  தற்போது தொற்றின் பாதிப்பு மிதமானதாக தான் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் (RT-PCR)  சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றை இலக்கத்தில் தான் தொற்று பதிவாகி வருகிறது.  என மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

4 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

6 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

8 hours ago