உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – திட்டம் இன்று தொடக்கம்!

Default Image

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

104 என்ற கட்டணமில்லா அழைப்பு மூலம் ஆலோசனை தரும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். அதன்படி, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய  மாணவர்கள் ‘104 என்ற கட்டணமில்லா அழைப்பு’ மூலம் மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
shyam selvan Manoj Bharathiraja
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike