விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!

Published by
பாலா கலியமூர்த்தி

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுவதாகவும், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. எனவே, விஜயகாந்த் குறித்து அடுத்தடுத்து வெளியான மருத்துவ அறிக்கை, அவரது உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது எ பேசப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மருத்துவமனையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம், பருவகாலத்தில் வரும் இருமல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஏற்கனவே மாற்று அறுவை சிகிச்சை (transplant) செய்துள்ளதால், இருமல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இருப்பினும், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார், சீராக உள்ளார். மேலும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago