சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும். – தமிழக அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்தாலும், இன்னும் பல்வேறு பகுதிகளில் இணைப்பு கொடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால், அந்த பகுதிகளில் மின் மோட்டார் தயார் நிலையில் இருக்கிறது.
இது குறித்து, தமிழக அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘ சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும்.
மழைநீர் தேங்கினால் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும்.’ என தமிழக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும்…