ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி!

கண்டலேறு ஆறு ஆற்று நீர்ப் பாசனத்திற்கான கட்டப்பட்டது. இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் அங்கிருந்து சென்னைக்கு நீர் கொடுக்கப்படுகிறது.
ஸ்ரீசைலம் அணைக்கட்டின் வழியாக சென்னை வந்தடையும் . தமிழக, ஆந்திர இரு அரசுகளின் ஒப்பந்தத்தின்படி 12 டி.எம்.சி நீரை கிருஷ்ணா ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்கப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் பூண்டி ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தற்போது பூண்டி ஏரி வறண்டு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும் ஆந்திராவிற்கு சென்றனர்.அங்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள்.
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒரு ஆண்டுக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. அதனால் இந்த வருடம் கிடைக்க வேண்டிய தண்ணீரும் வரவில்லை என கூறினார்.