அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்! நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு….

Default Image

தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு நடத்துவதாக கூறினார். டி.டி.வி.தினகரன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழலில் டி.டி.வி.தினகரன் தான் சிறைக்கு செல்வார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்