DMK: அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகனின் பதவி பறிப்பு! திமுக தலைமை நடவடிக்கை!

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து செஞ்சி மஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும், அவர் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
குறிப்பாக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மஸ்தான் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் செஞ்சி மஸ்தானை அமைச்சரவையில் இருந்து நீக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுபோன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் அலியும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024