குழந்தை திருமணம் செய்தால் வழக்குப் பதிவு – அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை…!

Published by
Edison

குழந்தை திருமணம் செய்தால் குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று ஆறு மாவட்டங்களை (தென் மண்டலம்) சேர்ந்த சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், சமூக நல இயக்குநர் டி.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் வி.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ்.வளர்மதி மற்றும் கன்னியாகுமரி,தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் , ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது,அமைச்சர் கீதாஜீவன் கூட்டத்தில் பேசியதாவது:

“குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும்,சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.இதனையடுத்து,குழந்தைகள் காப்பகங்கள்,முதியோர் இல்லங்கள் நடத்துவோர் அதற்கான அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும்.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.குறிப்பாக அவர்கள் படிப்பிற்கான செலவுகள் குறித்த அறிக்கையை அதிகாரிகள் உடனே தயார் செய்து அனுப்ப வேண்டும்”, என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

3 minutes ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

9 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

10 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

11 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

11 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

12 hours ago