அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக இளைஞர் பிரிவு செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும், திமுக இளைஞர் பிரிவு செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக வேளாண் அமைச்சர் பாபநாசம் திரு.துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் அதிமுகவினர்- குடும்பத்தார் – நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கொரோனா இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. அனைவரும் எச்சரிக்கையோடு இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…