Minister Anitha Radhakrishnan [File Image ]
Election2024 : ஆண்கள் மட்டும் என்ன இளிச்சவாயனுகளா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தில் கூறினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் திமுக அரசு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தென்காசி பகுதி, பூலாங்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் பற்றி கலகலப்பாக மக்களிடத்தில் எடுத்துக்கூறினார்.
அமைச்சர் பேசுகையில், நம்ம (ஆண்கள்) பஸ்ல போன காசு கொடுக்கணும். அவங்க (மகளிர்) போன காசு கொடுக்க வேண்டாம். அப்போ நாங்க எல்லாம் என்ன இளிச்சவாயனுகளா என மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து கலகலப்பாக பேசினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். மேலும் , மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்ள் குறித்தும் பிரச்சார கூட்டத்தில் எடுத்துரைத்தார் அமைச்சர்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…