incometax [Imagesource : Representative]
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என திருவண்ணாமலை, சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் போன்ற பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 4-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரிஏய்ப்பு செய்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இன்றைய (06.11.2023) பெட்ரோல், டீசல் விலை..!
அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை அருணை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இரும்பு கம்பி வியாபாரி ஜமாலுதீனின் கடை, வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. மேலும் பிரபல கட்டுமான நிறுவனங்களான அப்பாசாமி, காசா கிராண்ட் நிறுவனங்களிலும் நான்காவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…