மினி சட்டமன்றத் தேர்தல்: 21 தொகுதிகளுக்கான தேர்தலில் என்ன நடக்கும்..? யார் வெல்வார்?

Published by
Srimahath

அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர் அந்தக் கட்சிக்குள் பெரும் பூசல் ஏற்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் சசிகலா அவர்கள் கட்சியை முழுமையாக கைப்பற்ற எண்ணி பல பிரம்மாண்ட சாகச வேலைகளை செய்தார். ஆனால் அதற்குள் அவர் ஜெயிலுக்கு செல்லும் காலம் வந்தது. இதன் காரணமாக தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக சட்டமன்றடத்தில் வாக்களித்தனர். இதன் காரணமாக கட்சித் தாவல் தடைச் சட்டம் அவர்கள் மீது பாய்ந்தது. அப்போது சபாநாயகராக இருந்த தனபால், அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

பின்னர் இரு தரப்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்தது. சபாநாயகர் தனபால் அறிவிப்பு அது செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த 18 பேரும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்னும் தகுதியை இழந்தனர்.

அதன் பின்னர் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் திமுகவின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். மேலும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் விபத்தில் மரணமடைந்தார். அதன் பின்னர் ஓசூர் எம்எல்ஏவாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு ஒன்றில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் 21 சட்டமன்ற இடங்கள் காலியானது.

இந்த 21 சட்டமன்ற இடங்களுக்கும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் ஒரு மினி சட்டமன்ற தேர்தலாககவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது ஆட்சியில் இருக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 115 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 88 இடங்களுடன் உள்ளது. பெரும்பான்மை வகிக்க மொத்தம் 117 இடங்கள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த 21 இடங்களில் தற்போது நடக்கப்போகும் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக 10 தொகுதிகளுக்கு மேல் வென்றாக வேண்டும. அவ்வாறு இல்லை எனில் தொங்கு சட்டமன்றம் வந்துவிடும். தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக 10 இங்களையும், தினகரன் தலைமையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5 இடங்களையும் கைப்பற்றி விட்டால் தற்போது உள்ள அதிமுக அவ்வளவுதான், ஆட்சி கலைக்கப்படும் சூழ் நிலைக்கு சென்றுவிடும்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago