இன்று முதல் உயர்ந்தது பால் விலை.! ஒரு லிட்டர் பால் இவ்வளவா.? அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது.
  • ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு காரணமாக இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 3 முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிருக்கான விலையை உயா்த்தி இருந்தது. அதைத்தொடர்ந்து மேலும் ஒரு தனியார் நிறுவனம் கடந்த 12-ம் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியதாக சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணத்தால் பால் மற்றும் தயிர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடா்ந்து ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்ற காரணத்தைக் கூறி இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயா்த்துவதாக சுற்றறிக்கை மூலம் பால் முகவா்களுக்கு அறிவித்துள்ளன. அதாவது சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48 லிருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.52 லிருந்து ரூ.56 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டபட்ட பால் ரூ.60 லிருந்து ரூ.62 ஆகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் தயிரின் விலை ஒரு லிட்டர் ரூ.58 லிருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. இதையடுத்து மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயா்த்த முடிவு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயா்வு என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தன்னிச்சையான பால் விற்பனை விலை உயா்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இனி  வரும்காலத்தில் அரசு அனுமதியின்றி விலையை உயா்த்திட தடை விதிக்குமாறும், தமிழக முதல்வரை, பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

பின்னர் பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என மாடு வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் டீ கடை தொழிலார்கள் விலை உயரத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

22 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

51 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago