அதிர்ச்சி தகவல்.! ஊரடங்கு முடியும் வரையில் பால் விற்பனை நிறுத்தமா?!

Default Image

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் போலீசார் சோதனை அதிகமாகஉள்ளதால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் தெரிவித்துள்ளான்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆதலால், அந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தற்போது முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு மாவட்டங்களுக்குள் அனுமதிக்கின்றனர்.

இதனால் காவல் துறையினரின் சோதனை அதிகமாக உள்ளதை காரணம் கூறி, பால் முகவர்கள் இனி மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் நேரடியாக கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். போலீசார் சோதனை மேலும் தொடர்ந்தால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் பால் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested