[file image]
‘மிக்ஜாம்’ புயல் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையில் சென்னையில் தற்போது மழை குறைய தொடங்கியுள்ளது.
புறநகர் ரயில் சேவை:
‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு காரணமாக அனைத்து வழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை -திருவள்ளூர், கடற்கரை- வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக புறநகர் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு இருந்தது.
25 விரைவு ரயில்கள்:
‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னையில் இருந்து 25 விரைவு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத், சதாப்தி ரயில்கள், எழும்பூரில் இருந்து புறப்படும் நாகர, நாகர்கோவில் அந்த்யோதயா, குருவாயூர், மங்களூர், ராக்போர்ட், சேலம், விழுப்புரம், நாகர்கோவில் உள்ளிட்ட 25 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…