மிக்ஜாம் புயல் நிவாரணம்: வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

Published by
கெளதம்

மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது.

அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் கார்டு இல்லாமல் சென்னை சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கும் நிவாரண உதவிதொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் வசிப்போர் இதுவரை 4.9 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேரும் , திருவள்ளூரில் 22 ஆயிரம் பேரும் என மொத்தமாக 5.5 லட்சம் பேர் ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரண தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ரூ.6000 நிவாரணம்.! ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்.!

இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான செயலி மூலம் விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வு பணி முடிந்த பிறகு இவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது.

Recent Posts

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

38 minutes ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

1 hour ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

1 hour ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

4 hours ago