நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 10-க்கும் மேற்பட்ட ஒயின் பாட்டில்களை எலிகள் கடித்து அதிலுள்ள ஒயின்களை குடித்து சென்றுள்ளது.
கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், தற்பொழுது ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இன்று காலை அக்கதையின் மீட்பார்வையாளர் செந்திகுமார் அவர்களால் திறக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது கடைக்குள் பார்த்தபொழுது கடையில் இருந்த 12 ஒயின் பாட்டில் மூடிகள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததுடன் அதிலிருந்த ஒயின்கள் காலியாக இருப்பதையும் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலிகள் தான் ஒயின் பாட்டில்களை கீழே தள்ளி மூடிகளை சேதப்படுத்தி அதில் இருந்த ஒயினை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. சேதமடைந்த 12 ஒயின் பாட்டில்களின் விலை 1900 என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் குடிமகன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…