மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆரை நினைவுக் கொள்வோம் என அமைச்சர் எல்.முருகன் ட்வீட்.
அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகிலும், அரசியல் களத்திலும் பல வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை குறிப்பிட்டு, அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், திரையுலகில் தலைசிறந்த நடிகராக தனக்கென தனி தடம் பதித்து, அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களை நினைவுக் கொள்வோம் ன்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…