முன்னாள் மேயர் கொடூர கொலை வழக்கு! கொலைகாரனை 5 நாள் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு!

Default Image

திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லையில் உள்ள அவரது வீட்டில் கொடூர கொலை செய்யப்பட்டார். உடன் அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பலவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் தான் இந்த கொலையை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியது. அண்மையில் கார்த்திகேயனை 7 நாள் விசாரிக்க நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், கார்த்திகேயனை 5 நாள் மட்டும் விசாரணை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்