உதகை:இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள்,வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதேசமயம்,நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.குறிப்பாக கல்லார் – அடர்லி இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்து,மரங்களும் விழுந்தன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும்,குன்னூர்-உதகை இடையேயான ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,கல்லார் – அடர்லி இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதால் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…