கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி சிவசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீட்டை சுற்றியுள்ள 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரானது கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சுற்று சுவரை ஒட்டி இருந்த வீடுகளில் அந்த சுற்றுச்சுவர் விழுந்தது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து விடிந்த பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தையடுத்து வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் வேண்டி மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவில், கனமழை காரணமாக தன் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக எந்தவித போலீசார் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பேன் என உறுதி கூறுகிறேன். என கூறப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஒரு லட்ச ரூபாய் பணத்தை பிணைத்தொகையாக கட்ட சொல்லியும், மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட சொல்லியும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…