கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி சிவசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீட்டை சுற்றியுள்ள 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரானது கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சுற்று சுவரை ஒட்டி இருந்த வீடுகளில் அந்த சுற்றுச்சுவர் விழுந்தது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து விடிந்த பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தையடுத்து வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் வேண்டி மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவில், கனமழை காரணமாக தன் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக எந்தவித போலீசார் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பேன் என உறுதி கூறுகிறேன். என கூறப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஒரு லட்ச ரூபாய் பணத்தை பிணைத்தொகையாக கட்ட சொல்லியும், மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட சொல்லியும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…