11 ஆண்டுகளுக்குப் பிறகு குறித்த தேதியில் மேட்டூா் அணை திறப்பு

Default Image

கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் குறித்த தேதியில் காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12  மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 15 முறை மட்டுமே குறித்த தேதியான ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

மற்ற வருடங்களில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருந்து வருகிறது. அதனால், குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்த, 230 நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.

கடைசியாக 2008-ம் தான் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் குறித்த தேதியில் தண்ணீா் திறக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அணையின் நீா் இருப்பும், வரத்தும் அதிகமாக இருந்ததால்  ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்