சென்னையில் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் திங்கள் முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளது. மேலும், மெட்ரோ நிர்வாகம் செப்டம்பர் 7-ஆம் தேதி மெட்ரோ ரயில் இயங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது.
அதில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.அலுவலகம் செல்லும் நேரமான காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.மெட்ரோ ரயில் நிறுத்தம் நேரமானது 20 நொடிகளில் இருந்து 50 நொடிகளாக மாற்றியமைக்கப்பட்டது.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், சென்னையில் மெட்ரோ ரயில் காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கே புறப்படும் என்று தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…