சென்னையில் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும் – அமைச்சர் எம்.சி.சம்பத்

Default Image

சென்னையில் மெட்ரோ ரயில் காலை  7 மணிக்கே புறப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் திங்கள் முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளது. மேலும், மெட்ரோ நிர்வாகம் செப்டம்பர் 7-ஆம் தேதி மெட்ரோ ரயில் இயங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது.

அதில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.அலுவலகம் செல்லும் நேரமான காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.மெட்ரோ ரயில் நிறுத்தம் நேரமானது 20 நொடிகளில் இருந்து 50 நொடிகளாக மாற்றியமைக்கப்பட்டது.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத்  சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  சென்னையில் மெட்ரோ ரயில் காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கே புறப்படும் என்று தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்