பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகள் பறிமுதல் – பாஜக நிர்வாகி, இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது!

Published by
Castro Murugan

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகளை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 7 உலோக சுவாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரு நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகள் பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்த 7 சுவாமி சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் ஆகியோரை சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடக்கூடிய பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எனக்கூறி அலெக்சாண்டர் மூலம் ரூ.5 கோடிக்கு சிலைகளை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.

அலெக்சாண்டரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 காவலர்கள் உள்பட 3 பேர் சிக்கினர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி ராமநாதபுரத்தில் மறைத்து வைத்திருந்த 7  சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

7 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

8 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

9 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

10 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

11 hours ago