பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகள் பறிமுதல் – பாஜக நிர்வாகி, இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது!

Published by
Castro Murugan

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி மதிப்புடைய உலோகச் சிலைகளை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி மதிப்புடைய 7 உலோக சுவாமி சிலைகளை, சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரு நடராஜர், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகள் பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்திய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை அணி செயலாளர் அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்த 7 சுவாமி சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இரு காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் ஆகியோரை சிலைகள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடக்கூடிய பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எனக்கூறி அலெக்சாண்டர் மூலம் ரூ.5 கோடிக்கு சிலைகளை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.

அலெக்சாண்டரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 காவலர்கள் உள்பட 3 பேர் சிக்கினர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி ராமநாதபுரத்தில் மறைத்து வைத்திருந்த 7  சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago