எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது.. ஜனநாயகத்திற்கே திமுக ஆதரவு – முதல்வர் உரை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை பூந்தமல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன்பின், திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர். இதனால், செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர் கலைஞர் என்பதை மறந்து விட முடியாது.

பூந்தமல்லியின் உண்மை பெயர் பூந்தன் மல்லி என்பது தான். கொள்கை பிடிப்புள்ள உடன்பிறப்புகள் பிறந்துள்ள இடம். சீர்திருத்த திருமணங்கள் திமுக ஆட்சியில் தான் அங்கீகரிக்கப்பட்டது. 1967ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று அண்ணா முதல்வரானார். சீர்திருத்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார். நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஆட்சியை விட ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர். எமர்ஜென்சியின்போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர்.

இன்று புதுச்சேரி விடுதலை தினம்! இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு..கொடியேற்றி வைத்தபின் முதல்வர் அறிவிப்பு!

இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக. ஆட்சி கலைக்கப்படும் என்ற மிரட்டல்களுக்கு அடிபணியாமல் எதிர்த்தவர் கலைஞர். நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.  எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுகிறது. தோல்வி பயம் வந்துவிட்டதால் எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் வேளையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

நாட்டில் தற்போது ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற சூழல் அமைந்துள்ளது. எதிர்கட்சிகளை மிரட்டுவது, எதிர்க்கருத்து கூறுவோரை அச்சுறுத்தும் பணியில் ஈடுபடுகிறது. 5 மாநிலங்கள் உட்பட வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தோல்வியடையும் என தகவல் வருகிறது.  ஏற்கனவே, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஏவியவர்கள் இன்று செல்போனை ஒட்டுகேட்கப்படுகிறது.

டெல்லியில் இன்று முதல் டீசல் பேருந்துகள் இயங்க தடை.!

ஒட்டுக்கேட்பு புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். செய்தவையும் செய்துவிட்டு அமைச்சர் விசாரணை நடத்தப்படும் என்று கூறும் நிலையில்தான் நாடு உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுகின்றன. என்ன செய்தாலும், பாஜக தோல்வியை தழுவுவதை தவிர்க்க முடியாது. இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

2 minutes ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

16 minutes ago

தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…

49 minutes ago

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

12 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

12 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

12 hours ago