சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுறுத்தல்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே, சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று பேரவை தொடங்கியவுடன் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது பேசிய கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள், பேரவையில் இன்று கண்ணியமாகக் கர்வமில்லாமல் அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராக முடியாது என்று சொன்னவர் முகத்தை இந்த மன்றத்தில் பார்க்க முடியவில்லை என்று பேசினார்.
இதனையடுத்து அன்பழகன் அவர்கள் பேசிய போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னை பற்றி புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், மானியக் கோரிக்கைக்கு வாருங்கள், மானிய கோரிக்கைகள் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…