மேகதாது அணை :திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் …! திமுக எம்.பி. திருச்சி சிவா
மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக எந்த சாதகமான பதிலும் கிடைக்காததால் தான் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் .
மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு, அதுவரை போராட்டம் தொடரும் என்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.