மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவை என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனையடுத்து,பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில்,”மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக இருக்கிறது. தேவைப்பட்டால் தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்பதைத் தெரிவிக்க அடையாள போராட்டத்தை அறிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பாஜக எதிர்க்கும்,குறிப்பாக தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும் என்று தமிழக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி கூறியுள்ளார்.
இந்நிலையில்,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,”மேகதாது விவகாரத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது”,என்று தெரிவித்துள்ளார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…