அக்.3-ஆம் தேதி 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

அக்.3-ஆம் தேதி 4-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 3 முறை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதனையடுத்து, 4வது முறையாக அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 24.98 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதால் 20 ஆயிரம் மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், திங்கட்கிழமை தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை  என்றும், அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்