#BREAKING: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.., பக்தர்களுக்கு அனுமதி..!

Default Image

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் வரும் 24-ம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்விற்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் அன்று காலை 9:30 மணியிலிருந்து பிற்பகல் 2:30 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வை ஆன்லைன் நேரலையில் மூலம் பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை நடைபெறும். சித்திரை பெருவிழா வருகின்ற 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா காரணமாக சித்திரை பெருவிழா திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்று கொடியேற்றம் விழா நடைபெற உள்ளது.

கொடியேற்றும் நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முழுவதும் நேரலையில் மூலம் மட்டுமே பக்தர்கள் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்