மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு – வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் தொடர்புடையோர், தனியார் கல்லூரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள், துறையினரை விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி தண்டபாணி ஆணையிட்டார்.

முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிபிசிஐடி விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-21 கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

7 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

7 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

9 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

10 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

10 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

11 hours ago