தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.அதன்படி தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அனைத்து மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருத்துவ வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள வணிகர் சங்க பேரவை கூறியுள்ளதாவது: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் விசாரணைக் காவலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.கடையடைப்பை தொடர்ந்து மாலை 5 மணிக்கு உயிரிழந்த வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…