தென் மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்.!

Published by
கெளதம்

கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள் ஆளாகினர்.

உண்ண உணவின்றி அருந்த தண்ணீரின்றி தவித்து வந்தனர். இப்பொது நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இந்த நிலையில், வெள்ளம் பாதிப்பு குறித்து நேற்றைய தினம் தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தூத்துக்குடி வருகை தந்தார்.

அங்கு, அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 190 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி முதல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வரும் வேளையில், இன்றும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!

இந்த முகாமில், ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, காசநோய் கண்டறிதல் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  மேலும், நேற்று மட்டும் 2,882 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 67 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர் என்று கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

4 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

5 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

7 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

8 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

9 hours ago