தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய முதல் 3 மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.
அதன்படி,முதல் இடம் பிடித்த கோவை மாவட்டத்துக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவது இடம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெள்ளிப் பதக்கமும்,3-வது இடம் பிடித்த கரூர் மாவட்டத்துக்கு வெண்கலப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…