ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட யுக்தியை கையாளும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ..!

Default Image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை முதல் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்போகிறார் என்று கூறினார்.

வரும் செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. இரவு 7.45 மணி அளவில் குளத்தூரில் முதல் நாள் பயணம் நிறைவடைகிறது. புதன் கிழமை மாலை கரிசல் குளத்தில் தொடங்கி, குறுக்குச் சாலை வரை வாகனப் பிரச்சாரப் பயணத்தில் வைகோ ஈடுபடுகிறார்.

சனிக்கிழமை அன்று செய்துங்கநல்லூரில் தொடங்கி உடன்குடி வரையிலும், ஞாயிற்றுக் கிழமை திருவைகுண்டத்தில் இருந்து பெரிய தாழை வரையிலும் வைகோ, வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28ஆம் தேதி சனிக்கிழமை அன்று தூத்துக்குடி வி.வி.டீ சிக்னல் அருகே பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்