மாயத்தேவர் மரணம் – சசிகலா இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

Default Image

அதிமுகவின் முதல் எம்.பி மாயத்தேவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 

1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் நடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் மாயத்தேவர்.

இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சசிகலா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், கழக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.K. மாயத்தேவர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கியபின் முதன் முதலாக கழகத்தின் சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று புரட்சித்தலைவருக்கு பெருமை சேர்த்தவர்.

திரு.K.மாயத்தேவர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான கழக தொண்டர்களின் சார்பாக, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்