பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை முக ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தலுக்கான 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பில் பல்வேறு கவர்ச்சிகரமாக திட்டங்கள் அடங்கியுள்ளன. அதில், மகளிர் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்றும் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார். கூட்டுறவு நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…