அடிப்பாவி குமுறவைத்த குழந்தை விவகாரம்..!ஏமா..எத்தன கல்யாணம்..3னு சார்..சரி அப்ப இந்த குழந்தை யாருது??அது என்னது- என்ரீயான 4 நபர்..அதிர்ச்சியில் அதிகாரிகள்

Published by
kavitha

ராமநாதபுர மாவட்டத்தில் 3 திருமணங்களை செய்ததாகக் கூறும் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை 4வதாக ஒரு நபர் வந்து சொந்தம் கொண்டாடியதால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று குழந்தைகள் நல அதிகாரிகள் குழம்பி நிற்கின்றனர்.

நடிகர் வடிவேலு காமெடியில்  வருவது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.இந்த குழப்பமான சம்பவம் ஆனது ராமநாதபுரத்தை அடுத்த கோரவள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய  8 மாத குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு அதிரடியாக ஒரு புகார் வந்து உள்ளது.இந்த புகாரை அடுத்து விசாரிக்க விரைந்த அதிகாரிகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணை குழந்தையுடன் அலுவலகத்தில் ஆஜராகுமாறு  ஒரு உத்தரவையும் போட்டுள்ளனர்.

அலுவலகத்திற்கு  வந்த பெண்ணை விசாரித்ததில் 3 ஆண்டுகளுக்கு முன் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில் கட்டிட வேலைக்குச் செல்லும் அப்பெண் அங்கு ஏற்கனவே திருமணமாகிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபரோடு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்த விவகாரம் அப்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவரை விவாகரத்து செய்து உள்ளார்.

Image result for திருமணம்

விவகாரம் முடிந்த கையோடு ராமநாதபுரத்திற்கு அப்பெண்ணை வினோத் அழைத்து வந்துள்ளார். அங்கு தனியாக வீடு எடுத்து தங்கவைத்து சில காலங்கள் குடும்பம் நடத்தி வந்து உள்ளார். அதன் பின் அவர் வெளிநாடு செல்வதாகக் கூறி விட்டு சென்றவர் இரண்டு மாதங்கள் பணமும் அனுப்பி உள்ளார். அதன் பின் வினோத் அங்கே இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த நான்கே மாதத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை 3வதாக திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணத்திற்குள் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் இறந்ததாக கூறப்படும் வினோத்தின் உறவினர்கள் கேட்கவே, அவர்களிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார் அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார்.இந்நிலையில் தான் பென் குழந்தையை அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.இதனை கேட்டு கொண்டிருக்கும் போதே அதிகாரிக்கு  தலைசுற்றி கொண்டிருந்த நிலையில் அது தன்னுடைய குழந்தை என்று ம 4வதாக ஒருவர் அதிகாரிகளிடம் புகாரளித்து உள்ளார்.

புகார் அளித்தவர் உத்திரகோசமங்கையைச் சேர்ந்தவர் அவர் பெயர் சரத் என்கிற வேல்முருகன் என்று  தெரிவந்துள்ளது.ஐய்யோ கண்ண கட்டுதே என்று அதிகாரிகள் குழப்பத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.புகார் குறித்து சரத் கூறுகையில் 2வது கணவரான வினோத் வெளிநாடு சென்ற போது அந்தப் பெண்ணுடன் தாம் பழகியதாகவும் அதன் மூலம் பிறந்ததே பெண் குழந்தை என்று கூறியுள்ளார். இந்நிலையில் சரத்தின் புகாரை மறுக்கும் அந்தப் பெண், அது வினோத்தின் குழந்தைதான் என்று கூறுகிறார்.இந்த விவகாரத்தால் நொந்துபோன அதிகாரிகள் குழந்தை காப்பகத்தில் அக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு டி.என்.ஏ பரிசோதனைக்காக நீதிமன்றத்தை நாடுமாறு கூறி குழ்ந்தைக்கு உரிமை கொண்டாடிய சரத்தையும் அந்தப் பெண்ணையும் அனுப்பி வைத்தனர்.  இத்தகைய சூழலில் இரண்டாவது முறையாக அப்பெண் கர்ப்பம் தரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Recent Posts

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

35 minutes ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

8 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

11 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

12 hours ago